காதலை விட பாசம்தான் பெரிது என்று நினைக்கும் அக்கா ரம்யா.. கண்மூடித்தனமான பாசம் காதலுக்காக குறுக்கே வருவதை விரும்பாத தங்கை சௌமியா.
தந்தைப் பாசத்தால் தன் காதலைப் பேச மறுக்கும் அக்காவுக்காக, தங்கை அவளுக்காக பேச விழைய, அதன் பலனாய் ஏற்படும் கோளாறுகள்.. அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளைக்குத் தங்கை பெண் தேடும் சுவாரஸ்ஸம்..
அன்பரசனுக்கும், வருணுக்கும் இதில் என்ன பங்கு?..
தயக்கம் கலைந்ததா? கதையில் பயணியுங்கள்..