இது ஒரு கைத்தறி பட்டு நெசவாளியின் கதை! எப்படி பட்டின் கதையை பட்டென்று சொல்லிவிட முடியாதோ அது போலத்தான் நெசவாளியின் வாழ்க்கையும். பட்டு போல நளினமானது, ஆனால் பாவு போலச் சிக்கலானது.
இது பட்டுப் புழு.....பட்டுப்புடவையாகும்..........நீண்ட....கதை!
பட்டு... பார்ப்பதற்கு நளினம்! அணிந்தாலோ ஆடம்பரம்! ஆனால்... நெய்வதோ கடினம்!
குரங்கிலிருந்து தோன்றி அம்மணமாகத் திரிந்த மனித குலத்தின் நாகரீக வளர்ச்சியில், உடையும் முக்கியமான ஒரு அம்சமாகும்.
உழவன் ஏர் பிடிப்பான், நெசவாளன் தறி பிடிப்பான். அதனால் தான் உழவும், நெசவும் உலகளவில் எந்த காலத்திலும் முக்கியமான தொழில்களாக இருக்கின்றன.
ஆண்டிகளின் கோமணமானாலும் அரசனின் பட்டாடையானாலும், அடிப்படையில் மானம் காக்கும் மகத்தான நெசவுத் தொழிலிலிருந்து வந்த ஒரு விஷயமே.
'மனம் நெய்ய வாராயோ...' இக்கதை பிண்ணனியும் நலிந்து வரும் கைத்தறிப்பட்டின் நெசவைப் பற்றியதுதான்.
இக்கதையை நலிந்து வரும் பட்டு, மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
-ஸ்ரீலக்ஷ்மி சகோதரிகள்.