Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

Kaala Pravaham

ebook

கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்து போன இந்தக் காலகட்டத்தில், உறவுகளின் உன்னதத்தைப் பற்றிப் பேசும் கதை காலப்பிரவாகம். எத்தனையோ விதமான மாற்றங்களைக் காலப்பிரவாகம் ஏற்படுத்தலாம். நாகரிகங்கள் மாறலாம், பழக்க வழக்கங்கள் மாறலாம், அறிவியல் மாற்றங்கள் நிகழலாம். ஆனால், மாறாத குடும்ப உறவுகளுக்கிடையிலான அன்பைக் கதையின் கருவாக்கி, எழுத்து ஏணியின் அடுத்த படிக்கட்டில் கால்பதிக்கிறார்கள் இந்த இரட்டை எழுத்தாளர்கள்.பால்ய விவாகத்தில் குடும்ப வாழ்வைத் தொடங்கி, ஒரு மகவு பிறந்ததும் கைம்பெண் கோலம் பூண்டாலும், தளராத மனதுடன் ஆலமரமாய்க் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் மூன்று தலைமுறைக்கு மூத்தவரான ரங்கம் பாட்டியைச் சுற்றிக் கதை பயணிக்கிறது. அவரோடு சேர்ந்து, அந்தக் கால கட்டச் சமுதாயப் பெண்களின் நிலையை நம் கண்முன் நிறுத்துகிறார்கள்.எத்தனை விதமான துன்பங்கள் வந்தலும் தளராமல் குடும்ப முன்னேற்றத்திற்காகப் போராடும் பெண்கள், பழமைவாதத்திலிருந்து வெளிவந்து புரட்சிகர எண்ணங்களை விதைக்கிறார்கள். அதை எளிமையான எழுத்து நடையால், நெகிழ வைக்கும் உறவுகளின் பின்னணியோடு சொல்லியியிருக்கிறார்கள்.ஒரு சில மூத்த எழுத்தாளர்கள் மட்டுமே துணிந்து எடுக்கக்கூடிய கதைக்களம் இது. கதை மாந்தர்களின் பெயர்கள் உட்பட ஆச்சாரமான, பழைமையில் ஊறிய, அந்தக்கால கட்டத்தில், இந்தச்சமுதாயத்தில் இருந்த கோட்பாடுகள் தொடங்கி அங்கு பிறந்த பெண்மகவுகளின் நிலை, குழந்தை மணமும், மனமும் மாறா வயதில் மணம் செய்து, அவசரக்கோலம் அள்ளித்தெளித்தாற்போல, புதுப்பெண் கோலம் பூண்டு போன மகவு கைம்பெண் கோலம் கொண்டு, வந்த வழியே திரும்புவது கொடுமை. அதுவும் சாபக்கேடாகப் பல குடும்பங்களில் நாம் கண்ட காட்சிகளை அச்சில் வார்த்து அளித்துள்ளார்கள் எதிர்காலப் புகழேணியில் ஏறக் காத்திருக்கும் இவ்விரட்டை எழுத்தாளர்கள்.கதை முழுதும் பேச்சுவார்த்தை, சமுதாயப் பேச்சு வழக்கோடு சுருதி விலகாத நாதம் போல, அன்றும் இன்றும் கதையின்நாயகியான ரங்கம் பாட்டியோடு பயணித்திருக்கிறது இந்தக் காலப் பிரவாகம். வர்த்தக ரீதியிலான பல நாவல்களுக்கு மத்தியில், கால ஓட்டத்தில் அடித்துச் செல்லாது நின்று நிலைக்க வாழ்த்துகிறோம்.அன்புடன்பாரதி கண்ணம்மா – சென்னைவசந்தி சில்வெஸ்டா - தூத்துக்குடி.


Expand title description text
Publisher: Pustaka Digital Media

OverDrive Read

  • Release date: May 29, 2020

EPUB ebook

  • File size: 187 KB
  • Release date: May 29, 2020

Formats

OverDrive Read
EPUB ebook

subjects

Fiction Literature

Languages

Tamil

கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்து போன இந்தக் காலகட்டத்தில், உறவுகளின் உன்னதத்தைப் பற்றிப் பேசும் கதை காலப்பிரவாகம். எத்தனையோ விதமான மாற்றங்களைக் காலப்பிரவாகம் ஏற்படுத்தலாம். நாகரிகங்கள் மாறலாம், பழக்க வழக்கங்கள் மாறலாம், அறிவியல் மாற்றங்கள் நிகழலாம். ஆனால், மாறாத குடும்ப உறவுகளுக்கிடையிலான அன்பைக் கதையின் கருவாக்கி, எழுத்து ஏணியின் அடுத்த படிக்கட்டில் கால்பதிக்கிறார்கள் இந்த இரட்டை எழுத்தாளர்கள்.பால்ய விவாகத்தில் குடும்ப வாழ்வைத் தொடங்கி, ஒரு மகவு பிறந்ததும் கைம்பெண் கோலம் பூண்டாலும், தளராத மனதுடன் ஆலமரமாய்க் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் மூன்று தலைமுறைக்கு மூத்தவரான ரங்கம் பாட்டியைச் சுற்றிக் கதை பயணிக்கிறது. அவரோடு சேர்ந்து, அந்தக் கால கட்டச் சமுதாயப் பெண்களின் நிலையை நம் கண்முன் நிறுத்துகிறார்கள்.எத்தனை விதமான துன்பங்கள் வந்தலும் தளராமல் குடும்ப முன்னேற்றத்திற்காகப் போராடும் பெண்கள், பழமைவாதத்திலிருந்து வெளிவந்து புரட்சிகர எண்ணங்களை விதைக்கிறார்கள். அதை எளிமையான எழுத்து நடையால், நெகிழ வைக்கும் உறவுகளின் பின்னணியோடு சொல்லியியிருக்கிறார்கள்.ஒரு சில மூத்த எழுத்தாளர்கள் மட்டுமே துணிந்து எடுக்கக்கூடிய கதைக்களம் இது. கதை மாந்தர்களின் பெயர்கள் உட்பட ஆச்சாரமான, பழைமையில் ஊறிய, அந்தக்கால கட்டத்தில், இந்தச்சமுதாயத்தில் இருந்த கோட்பாடுகள் தொடங்கி அங்கு பிறந்த பெண்மகவுகளின் நிலை, குழந்தை மணமும், மனமும் மாறா வயதில் மணம் செய்து, அவசரக்கோலம் அள்ளித்தெளித்தாற்போல, புதுப்பெண் கோலம் பூண்டு போன மகவு கைம்பெண் கோலம் கொண்டு, வந்த வழியே திரும்புவது கொடுமை. அதுவும் சாபக்கேடாகப் பல குடும்பங்களில் நாம் கண்ட காட்சிகளை அச்சில் வார்த்து அளித்துள்ளார்கள் எதிர்காலப் புகழேணியில் ஏறக் காத்திருக்கும் இவ்விரட்டை எழுத்தாளர்கள்.கதை முழுதும் பேச்சுவார்த்தை, சமுதாயப் பேச்சு வழக்கோடு சுருதி விலகாத நாதம் போல, அன்றும் இன்றும் கதையின்நாயகியான ரங்கம் பாட்டியோடு பயணித்திருக்கிறது இந்தக் காலப் பிரவாகம். வர்த்தக ரீதியிலான பல நாவல்களுக்கு மத்தியில், கால ஓட்டத்தில் அடித்துச் செல்லாது நின்று நிலைக்க வாழ்த்துகிறோம்.அன்புடன்பாரதி கண்ணம்மா – சென்னைவசந்தி சில்வெஸ்டா - தூத்துக்குடி.


Expand title description text